இஸ்லாமிய வைத்தியர் உருவப் பொம்மையை எரித்து போராட்டம் நடாத்திய பேரினவாத சிங்களவர்

breaking
  சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்துக்கள் சேர்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதான குருநாகல மருத்துவர் ஷாபியின் உருவப் பொம்மையை எரித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத கருத்தடையால் பாதிக்கப்பட்ட தாய்மாருக்கு நட்ட ஈடு வேண்டுமெனக் கோரி காலி அக்மீமன பிரதேச சபையின் பெரமுன உறுப்பினர் ஏ.கே சுகத், மருத்துவரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.