இனவாதம் கக்கும் விமல்: முஸ்லீம் எம். பியிடம் நீங்கள் சஹ்ரானின் சித்தப்பாவா எனக் கேள்வி

breaking
  தெமட்டகொடையில் குண்டை வெடிக்கவைத்து உயிரிழந்தவர் ரிஷாத் பதியுதீனின் சகோதரி. இஸ்லாமிய பயங்கரவாதிகளை பாதுகாக்க இன்னும் சிலர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என எதிர்க்கட்சி எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்தார். இதன்போது அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்,பி குறுக்கிட்டபோது, நீங்கள் சஹ்ரானின் சித்தப்பாவா என கேட்டபோது இருவருக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற மதுவரி கட்டளை சட்ட விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலே இவ்வாறு இரண்டுபேருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது. விமல் வீரவன்ச எம்.பி, அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தெமட்டகொட குண்டு வெடிப்பில் ரிஷாத் பதியுதீனின் தாயாரின் சகோதரியே கொல்லப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்த பொது அதனை அப்துல்லா மஹ்ரூப் எம்.பி மறுத்தார். அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்லவெனவும் கூறினார். இதன்போது விமல் வீரவன்ச, நீங்களா சஹ்ரானின் சித்தப்பா? ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்லவென்றால் சஹ்ரான் என்ன இந்துவா அல்லது பௌத்தனா? ஐ.எஸ் .ஐ.எஸ் .பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் இல்லையா? சிரியாவில் கொள்வது முஸ்லிம்கள் இல்லையா? அதனால் நீங்கள்தான் அடிப்படைவாதிகளை பாதுகாப்பவர்கள். அதனால்தான் ரிஷாத் பதியுதீன்னுக்கு எதிராக குற்றம் தெரிவிக்கப்படுகின்றது. பெளசிக்கோ எம்.பிக்கோ ஹக்கீம் எம்.பிக்கோ இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதில்லை. அதனால் இந்த நாட்டில் அடிப்படைவாதம் எந்த இனத்தில் இருந்து வந்தாலும் அதனை நாங்கள் தடுத்து நிறுத்தவேண்டும். அதற்கு தமிழ் முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்து போராடவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டை பாதுகாக்கலாம் என்றார்.