வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீடி இலைகள் கைப்பற்றல்

breaking
வடதமிழழீழம்: மன்னார் தோட்டவெளி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 473 கிலோ 150 கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை மன்னார் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்று செவ்வாய்க்கிழமை(18) மாலை மீட்டுள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். மன்னார் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக உதவி காவல்துறை பரிசோதகர் கீர்த்தி தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, 15 மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 473 கிலோ 150 கிராம் நிறை கொண்ட பீடி சுற்றும் இலைகளை மீட்டுள்ளதோடு, குறித்த வீட்டில் இருந்த எருக்கலம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். மீட்கப்பட்ட பீடி சுற்றும் இலைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.