ரணிலை மிரட்டி பணம் பறிக்கும் கூட்டமைப்பு!

breaking
தென் தமிழீழம் அம்பாறைகல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் (19.06.19)முன்னெடுக்கப்படுகின்றது. இன்னிலையில் இந்த விடையம் குறித்து பாராளுமன்றத்திலும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைந்து நடவடிக்கை எடுக்காவிடின் அரசாங்கத்திற்கான ஆதரவு விலக்கிக்கொள்ளப்போகின்றோம் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை நகைப்பிற்கிடமான செயலாகும். அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து பல கோரிகளை வாங்கிவிட்டு மக்களின் எத்தனையோ பிரச்சனைகள்,காணிப்பிரச்சனைகள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைகள்,மத அத்துமீறல்கள், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் வடக்கு கிழக்கு பகுதிகளில் காணப்படும் நிலையில் தற்போதுதான் அரசாங்கத்தின் ஆதரவினை விலக்கபோவதாக மிரட்டுகின்றார்கள். இது ரணிலை மிரட்டி இன்னும் பணம் சம்பாதிக்கும் கூட்டமைப்பின் யுத்தியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது மக்களே புரிந்துகொள்ளுங்கள் நீங்கள் தெரிவு செய்தவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை புரிந்து கொண்டு செயற்படுங்கள்.