நாங்கள்தான் ராஜா நாங்கள்தான் மந்திரி மக்களை ஏமாற்றும் கூட்டமைப்பு!

breaking
தமிழ் மக்கள் பிரதி நிதிகள் என்று சொல்கின்ற கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாட்டில் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் கம்பரெலிய திட்டம் என்ற திட்டம் ஊடக பல கோடி பணங்களை அரசாங்கத்திடம் இருந்து பெற்று தமிழ் மக்களை அபிவிருத்தி செய்கின்றார்கள். கம்பரெலிய வந்ததால் கூட்டமைப்பினரின் காட்டில் நல்ல மழை ஆனால் வன்னிக்காட்டில் மக்கள் வறட்சியால் சாவு,இதுதான் கூட்டமைப்பின் இன்றையநிலை யாழ்ப்பாணத்தில் சுமந்திரனும்,சரவணபவானும் செய்யும் அபிவிருத்தி வேலைகள் மக்களை எரிச்சல்ஊட்டுகின்ற அதேவேளை வன்னியில் சாந்தி சிறீஸ்கந்தராசாவும்,சிவமோகனும் செய்யும் வேலைகளால் மக்கள் விசனமடைந்துள்ளார்கள். பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வடக்கு கிழக்கில் வேலை வாய்ப்பின்றி காணப்படுகின்றார்கள் காணாமல் போன பல ஆயிரக்கணக்கானவர்களின் உறவினர்கள் போராட்டம் செய்கின்றார்கள்,அந்த உறவுகளின் உறவுகள் வேலைவாய்ப்பின்றி தொழில் எதுவும் இன்றி வாழ்வாதாரத்திற்கு கஸ்ரப்படுகின்றார்கள். இன்னிலையில் தமிழினத்தை அழித்த படுகொலையாளிகளுடன் கைகோர்த்து அவர்களிடம் பணங்களை வாங்கி சுருட்டிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கம் கூட்டமைப்பினரின் இன்றைய நிலையினை மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். அவர்கள் தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே வீர வசனங்களை விதைப்பார்கள் மீண்டும் உங்கள் வீடுதேடி வருவார்கள். மறந்து விடாதீர்கள் கடந்த ஜந்து ஆண்டுகளில் இவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனுமாய் சிந்தித்து பாருங்கள்..