நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் சாட்சியமளிக்கவுள்ளார்

breaking
  உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராஷிக் இன்று(20) சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தத் தெரிவுக்குழ கூடவுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளும் இன்றைய தினம் சாட்சியளிக்கவுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராஷிக் தெரிவுக்குழுவில் இன்று சாட்சியம்