பிரதேச சபை உறுப்பினர் சி.குகன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

breaking
பிரதேச சபை உறுப்பினர் சி.குகன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைப்பீடத்திற்கு கடிதம்!
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் சி.குகநேசன் அவர்கள் தமிழரசு கட்சியில் இருந்து கொண்டு கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளதுடன் பல சட்டத்திற்கு முரணாக வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.
இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கட்சியின் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் கையெழுத்து இட்ட கடிதம் ஒன்று 23.06.19 அன்று மாட்டின் வீதியில் உள்ள தமிழரசு க்டசி தலைமை அலுவலகத்தில் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அண்மையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்ளின் ஆழுகையின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தினை புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற தீர்மானத்தினை இவர் முன்வைத்துள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் சி.குகநேசனுக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.