கண்டி – பன்வில, மடுல்கல தோட்டத்தில் மின்சாரம் தாக்கி 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
வீட்டிலுள்ள மின் ஆளிக்குள் விரல் சிக்குண்ட போது மின்சாரம் தாக்கியுள்ளது.
குழந்தையின் சடலம் மடுல்கல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பன்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.