வெளிநாட்டு கைதிகள் தப்பி ஓட்டம் துப்பாக்கி சூடு!

breaking
ஸ்ரீலங்காவின் நீர்கொழும்பு பகுதியில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு சிறைக் கைதிகள் இருவர் தப்பியோடினர். எனினும் துப்பாக்கிச் சூடு நடத்தி கைதிகளை துரத்திப் பிடித்தனர் சிறைக்காவலர்கள். நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாகிஸ்தான் மற்றும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவர் சிறைக் காவலர்களின் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளனர். சிறைக் காவலர்கள் அவர்களை விரட்டிச் சென்று வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்தனர் இதனால் நீதிமன்ற வளாகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.