முள்ளிவாய்க்காலில் தேசிய போதைஒழிப்பு வார கவனயீர்ப்பு நடவடிக்கை!

breaking
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்கில் தேசிய போதை ஒழிப்புவாரத்தை முன்னிட்டு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்று 25.06.19 அன்று மாலை  முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் மேற்கு விடியல் சனசமூகத்தினரால் குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .இதன் ஒரு அங்கமாகவே முள்ளிவாய்க்கால் மேற்கு மக்களால் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 'ஏற்றத்தாழ்வு பார்க்காத போதை மது' மதி மயக்கிட துடிக்கும் மதுவை ஒழி 'மதியை போக்கும் மதுவே போ போ ' போதை அற்ற தேசத்தை உருவாக்குவோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.