கத்தாரில் "கரும்புலிகள் நாள்" நினைவேந்தல்

breaking
எம் தேச விடுதலைக்காக, எம் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற பெருவிருப்புடன், காற்றோடு கலந்து விட்ட எம் தேசத்தின் புயல்களாகிய கரும்புலிகளை நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்தும் வகையில் தமிழர் கலை அறிவியியல் பேரவையின் ஏற்பாட்டில் யூலை 5, 2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.30 மணியளவில் "கரும்புலிகள் நாள்" நினைவேந்தல், வீரவணக்க நிகழ்வு நடைபெறும். (வழக்கமாக மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறும் இடத்தில்) இதில் கத்தார் வாழ் உறவுகள் அனைவரும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு எம் தேசத்தின் புயல்களுக்கு வீரவணக்கம் செலுத்திட தமிழர் கலை அறிவியியல் பேரவை அன்புடன் அழைக்கிறது.