மட்டக்களப்பு கரடியனாறு குசலான மலையடிவாரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலர்சேனை, வேப்பவெட்டுவானைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வழமைபோன்று மாடுகளைப் பராமரித்துக் கொண்டிருந்தவரை, காட்டுப்பகுதிக்குள் இருந்து திடீரென வெளிவந்த காட்டு யானை தாக்கியது எனத் தெரிவிக்கப்படுகிறது.