இவர்களா தமிழர்களுக்கு நீதி வழங்க போகிறார்கள்!

breaking
இன்று திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட மாணவர்களின் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து சிறிலங்கா இராணுவ சிப்பாய்களும் அனைத்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுளனர். குறிப்பாக இவ்வாறு தமிழீழ பிரதேசங்களில் சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்திருந்த ஒட்டுக்குழுக்களாலும் பல்வேறு அப்பாவி இளைஞர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். அதே கால கால மாக இனவழிப்பு செய்யப்பட்டு வரும் தமிழ்மக்கள் 2009 மே 18 முள்ளிவாய்க்காலி கொத்துகொத்தாக உச்சகட்ட இனவழிப்புக்குள்ளாக்கப்பட்டனர். அந்த இனவழிப்புக்கான நீதியை தமிழ்மக்கள் சர்வதேசத்திடம் வேண்டி நிற்கின்ற இந்த வேளையில் இந்த தீர்பானது இலங்கை நீதி பெரும்பான்மை சிங்களவர்களுக்கு மட்டுமே என்பதை பறைசாற்றி நிற்கின்றது.