சூரியனே,
உன் கதிர்கள் நாம்.
அதனால்தான் எம்மை
ஒருவராலும் சுட்டெரிக்க
முடியவில்லை.
நீ
வெப்பத்தின் தந்தை.
நாம்
வெப்பக் குழந்தைகள்.
அதனால்தான்
எதிர்ப்பவர்களையெல்லாம்
எரிக்க முடிகிறது.
நீ
மறைந்தாலும் மீண்டும் மீண்டும்
உதித்துக் கொண்டிருக்கிறாய்.
அதனால்தான்
நாமும்
விழுந்தாலும் விதையாகி
முளைத்துக்
கொண்டிருக்கிறோம்.
மாவீரரான மகத்தான
ஓவியர்கள் தீட்டிய
சிவப்புச் சித்திரங்கள்.
உன் பெயரில்
ஒளிர்ந்து
கொண்டிருக்கிறோம்.
நீ
உன் கதிர்களை ஒருபோதும்
சுட்டெரிக்கப் போவதில்லை.
அது போல்
உன்னைச் சுட்டெரிக்க
இன்னொரு சூரியன்
உதிக்கப் போவதில்லை.
-மாவீரர் மேஜர் அமுதா
நெருப்பினுள் நின்று கவிதை தொகுப்பிலிருந்து ...!