யாழ் திக்கத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

breaking
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை திக்கம் பகுதியில் 145 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உடுகம சூரிய தலைமையிலான பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று (திங்கட்கிழமை) குறித்த நபர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பொதி செய்யப்பட்ட நிலையில், கஞ்சா பொதிகளை எடுத்துச் சென்றபோதே குறித்த கஞ்சா மீட்கப்பட்டதுடன், 27 வயதுடைய நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் மற்றுமொருவர் தப்பி ஓடியுள்ள நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும் கைதுசெய்த நபரை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக காங்கேசன்துறை  பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.