தூத்துக்குடியில் பதற்றம் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி கொலை.!

breaking
பட்டப்பகலிலேயே பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இது தூத்துக்குடியையே அதிர வைத்துள்ளது. விளாத்திகுளம் பகுதியில் உள்ள புதூரில் வட்டார வளர்ச்சி மையத்தில் சிறப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வடிவேல் முருகன். 12-ம் வகுப்பு ஆசிரியர் இந்நிலையில், இன்று பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக பள்ளி வளாகத்தில் வடிவேலு நின்று கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் நுழைந்த 2 பேர், வடிவேல் முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் பள்ளி வளாகத்திற்கு அருகேயே வடிவேல் சுருண்டு பிணமாக விழுந்தார். இந்த கொலை குறித்து தகவலறிந்து விரைந்து வந்த விளாத்திகுளம் போலீசார் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணையையும் துவங்கி உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலை சம்பந்தமாக அவரது மைத்துனர் அற்புத செல்வன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.