இராணுவ சிப்பாய் உள்ளிட்ட 5போ் கைது..! யாழ்.ஈச்சமோட்டையில் திடீா் சுற்றிவளைப்பு

breaking
யாழ்.ஈச்சமோட்டை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் உலாவிய இராணுவ சிப்பாய் ஒருவா் உள்ளிட்ட 5 போ் யாழ்.பொலிஸாாினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். சந்தேக நபர்கள் உள்பட 5 பேரிடமிருந்தும் ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை பகுதியில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் இராணுவத்தில் சேவையாற்றும் தமிழ் உத்தியோகஸ்தர் என விசாரணைகளில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.