யாழ்.கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.
3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 8 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டுத் தப்பித்தது என்று பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைக் கும்பல், வீடுகளின் கதவு, யன்னல்கள் உள்பட பெறுமதியான தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சிங்கள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.