முல்லைத்தீவில் மூன்று இடங்களில் புதிய அலைவரிசை கோபுரங்கள் மக்கள் அச்சத்தில்!

breaking
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் மூன்று இடங்களில் புதிய அலைவரிசை கோபுரங்கள் அமைக்கப்பட்டு இயங்கப்பட்டு வருவதால் மக்கள் 5 ஜி அலைவரிசை கோபுரங்களாக இருக்குமோ என்ற அச்சத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மக்களுக்கு தகுந்த விளகத்தினை கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
வடக்கில் யாழ்ப்பாணத்தில் 5ஜி அலைவரிசை கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றுவரும் வேளையில் அதே அலைவரிசை கோபுரங்களை ஒத்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரண்டு கோபுரங்களுகம் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் ஒரு கோபுரமும் அமைக்கப்பட்டு இயங்கிவருகின்றன இவை அனைத்தும் தனியார் காணிகளிலும் ஆலய வளாகத்திலும் அமைக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தகள் செய்துகொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உடையார் கட்டு பாடசாலைக்கு அருகில் ஒரு கோபுரமும், புதுக்குடியிருப்பு புதியகுடியிருப்பு பகுதியில் ஒரு கோபுரமும்,வற்றாப்பளை அம்மன் ஆலய  முன்றலில் ஒரு கோபுரமும் காணப்படுகின்றன இவை ஆறு மாங்களுக்கு மேலாக இயங்கி வருகின்றன குறித்த கோபுரங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன
இது தொடர்பில் உரிய பிரதேச சபையினரும் மக்களுக்கு தெளிவான விளக்கத்தினை கொடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.