ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜெர்மன் கொலோன் மத்திய மசூதி காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர், மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து ஜெர்மன் காவல்துறையினர் கொலோன் மத்திய மசூதியைச் சுற்றிவளைத்து சீல் வைத்துள்ளனர்.
ஜெர்மனியில் மிகப் பெரியது மற்றும் ஐரோப்பாவில் மிகப் பெரிய ஒன்றான மசூதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மின்னஞ்சலின் சரியான தகவலை உடகங்களுக்கு தெரிவிக்க மறுத்த காவலதுறை அதிகாரிகள் பலமணிநேரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.