ஸ்ரீலங்கா அரசினால் எரிபொருட்களின் விலை குறைப்பு!

breaking
உலக சந்தையில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள விலைமாற்றத்திற்கு அமைய நிதி அமைச்சினால் ஸ்ரீலங்காவில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய 92 ஒக்டெய்ன் வர்க்க பெற்றோலின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 5 ரூபாவாலும் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சூப்பர் டீசலின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.