இந்திய இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும் என அல்கொய்தா அமைப்பின் தலைவரான அய்மான் அல் ஜவாஹிரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது குறித்து அல்கொய்தா அமைப்பினர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த காணொளியில், ‘இந்திய இராணுவத்தினருக்கும், காஷ்மீர் அரசுக்கு எதிராகவும் போராட வேண்டும்.
இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து மனித இழப்புக்களை ஏற்படுத்த வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்கொய்தா இயக்கத்தினர் இழந்த நிலங்களை மீட்பதற்காகவே காஷ்மீர், பிலிப்பைன்ஸ், மத்திய ஆசிய நாடுகளில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காஷ்மீரில் செயற்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளை உற்சாகப்படுத்தவே இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.