விடுதலைப்புலிகளின் தங்கபுதையலை தேடி ஏமாற்றமடைந்த பொலீசார்!

breaking
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் தனியார் வீடு ஒன்றில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை ஒன்று 11.07.19 அன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இறுதி போர் நடைபெற்ற காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளால் அந்த இடத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடியே இந்த அகழ்வு நடவடிக்கை ச.தம்பிராசா என்பரின் காணிக்குள் வீட்டிற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கடந்த 27 ஆம் திகதிமுதல் பொலீசாரின் பாதுகாப்பு போடப்பட்டு வந்த நிலையில் 11.07.19 அன்று தோண்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது
கடந்த மாதம் 27ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடி 15 பேர் அடங்கிய குழு ஒன்றினை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை மையமாகவைத்து குறித்த பகுதியில் தோண்டிபார்ப்பதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கியுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு உதவிபிரதேச செயலாளர்,கிராமசேவையாளர்,தொல்பொருள்திணைக்கள உத்தியோகத்தர்கள்,படைஅதிhகரிகள்,பொலீசார் ஆகியோர் முன்னிலையில் குறித்த பகுதி தோண்டப்பட்ட போதும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அதனை மூடிவிட்டு சென்றுள்ளார்கள்.