மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம்: கன்னியாவில் புத்த விகாரை

breaking
    திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள பிரதேசத்தில் மீண்டும் புத்த விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருவதாக தென்கயிலை ஆதீனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தென்கயிலை ஆதீன குரு முதல்வர் கருத்து தெரிவிக்கையில், கடந்த திங்கட்கிழமை முதல் கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் அதனை அகற்றி அங்கு புத்த விகாரை அமைக்கும் பணி தொடர்வதாகவும் நேரடியாக அங்கு சென்று தாம் அதனை ஏன் உடைக்கிறீர்கள் என்று கேட்டபோது திருமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அங்கு ஒரு புத்த விகாரை அமைக்கும் பணியை ஆரம்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். உண்மையில் திருமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் கன்னியா பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் புத்த விகாரை அமைப்பதற்கு எந்த ஒரு அனுமதியும் எவராலும் வழங்கப்படவில்லை. திருமலையில் இடம்பெற்ற அனைத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கும் நானும் சென்றிருந்தேன் இதுவரையில் எந்த ஒரு கூட்டத்திலும் இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படவில்லை. அப்படியாயின் எந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன இது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சமூகமளித்திருந்த பல அமைப்புக்களை சார்ந்த பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் அனைவரையும் கேட்டுள்ளேன். எந்த ஒரு கூட்டத்திலும் இவ்வாறான முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர்களும் தெரிவித்திருக்கும் நிலையில் எவ்வாறு தொல்பொருள் திணைக்களம் இவ்வாறு விகாரை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கடந்த மே மாத நடுப்பகுதியில் இவ்வாறான பிள்ளையார் இருந்த ஆலயத்தை உடைத்து புத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெற்றிருந்த நிலையில் நாம் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் பிரதேச சபை ஆகியோருக்கும் இந்து கலாச்சார அமைச்சர் மனோ கணேசனுக்கு மாறிவிடும் உடனடியாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று இவ்வாறு தொடர்பு அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்