யாழில் 64 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒரேகுடும்பத்தினை சேர்ந்த 4பேர் கைது!

breaking
யாழ். மாதகல் பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 04 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர். அத்தோடு, இச்சந்தேகநபர்களிடமிருந்து 64 கிராம் கேரள கஞ்சாவையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த பகுதியில் இளவாலை பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் நடத்திய சோதனையின்போது, இச்சந்தேகநபர்கள் நேற்று (10) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.