பிரதேச செயலக வளாகத்தில் குளவிகுத்தி ஜவர் மருத்துவமனையில்!

breaking
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வளாகத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஜந்து பேர் புதுக்குடியிருப்பு ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் 11.07.19 இன்று நடைபெற்றுள்ளது. இன்று மதியவேளை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வளாக கட்டடத்தின் முன்பக்கத்தில் உள்ள இரண்டு குளவி கூடுகள் காணப்படுகின்றன. அதில் ஒன்று கலைந்து அங்கு சென்ற மக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர் மீது குத்தியுள்ளன  இதனால் அதில் நின்ற மக்கள் கலைந்து சென்று பாதுகாப்பாக கட்டங்களுக்குள் புகுந்துகொண்டுள்ளார்கள். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக பிரதேச செயல ஊர்தியில் புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஏற்றி செல்லப்பட்டு அங்கு ஜவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். குளவிக்கொட்டிற்கு அரச உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் காவலாளி ஒருவர் உள்ளிட்ட ஜந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்னரும் பிரதேச செயலக வாசலில் குளவிகள் கூடுகட்டி இருந்துள்ளன அவை கலைக்கப்பட்டபோதும் மீண்டும் மீண்டும் குளவிகள் வந்து கூடுகட்டி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். நாளாந்தம்ல பல மக்கள் அரசசேவைகளை பெறுவதற்காக பிரதேச செயலகம் வந்து செல்லவுள்ள நிலையில் குறித்த குளவிகூடு கலைந்துள்ளமையினால் அங்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.