ஒரே நேரத்தில் தரைவழி, வான்வழி தாக்குதலால் ஆப்கானிஸ்தானில் பதற்றம் .!

breaking
ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. தலீபான்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தாலும், தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என தலீபான்கள் திட்டவட்டமாக அறிவித்து விட்டனர். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் தலீபான்களுக்கு தக்க பதிலடி தந்து வருகின்றனர்.
இந்த நிலையில் குண்டூஸ் மாகாணத்தில் இமாம் சாகிப் மாவட்டத்தின் குர்கான் தாபா பகுதியில் பதுங்கியுள்ள தலீபான்களை குறிவைத்து ஆப்கானிஸ்தான் படைகள் ஒரே நேரத்தில் தரைவழி தாக்குதலையும், வான்வழி தாக்குதலையும் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய நடத்தின.
இதில் தலீபான்கள் பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டன. 20 தலீபான்கள் கொல்லப்பட்டனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி குண்டூஸ் மாகாண ராணுவ செய்தி தொடர்பாளர் குலாம் ஹஸ்ரத் கரிமி கூறுகையில், படைகள் தரப்பில் உயிர்ச்சேதம் உண்டா என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
குண்டூஸ் மாகாணத்தில் தலீபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் இடையேயான சண்டை வலுத்துவருவதால் அங்கு வசித்து வருகிற அப்பாவி மக்கள் உயிரைக் காத்துக்கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.