தண்டுவான் பாடாசலை மாணவர்களுக்கு பளுதூக்கும் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

breaking
முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்கிடையிலான தேசியரீதியிலான பளுதூக்கும் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
இன்னிலையில் மாணவர்களின் பயிற்சியினை வலுப்படுத்தும் நோக்கில் யாழ் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியின் அவுஸ்ரேலியா பழைய மாணவர்சங்கத்தின் ஏற்பாட்டில் ஜம்பதாயிரம் ரூபா பெறுமதியான பளுதூக்கும் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
போரால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்டுவான் பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் தங்கள் விளையாட்டு திறைமைகளை வெளிக்கொணர்ந்துள்ளார்கள் மேலும் அவர்களை வளப்படுத்திக்கொள்ள இந்த உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக விக்ரோரியா கல்லூரியின் பழைய மாணவர்சங்கத்தினர் தெரிவித்துள்ளார்கள்.