முல்லைத்தீவில் வெளிமாவட்ட மீனவாின் வாடி எாிக்கப்பட்டது!

breaking
முல்லைத்தீவு - அளம்பில் வடக்கு, உப்புமாவெளிப் பகுயில், இனந்தெரியோதாரால் மீனவர் வாடி ஒன்று எரிக்கப்பட்டுள்ளது. பிறிதொருவருடைய அனுமதிப் பத்திரத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டுவந்த வெளிமாவட்ட மீனவர் ஒருவருடைய சிறியவாடி ஒன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் அறியவருகையில், குறித்த வாடிக்குரிய வெளிமாவட்ட மீனவர் அனுமதிப்பத்திரமில்லாது, வேறு ஒருவருடைய அனுமதிப்பத்திரத்தில் தொழிலை மேற்கொண்டதுடன், உப்புமாவெளி மீனவர் சங்கத்துடனும் கடந்த காலங்களில் முரண்பட்டதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந் நிலையில் 11.07.2019 இன்றைய நாள் காலை இடம்பெற்ற முரண்பாடுகளையடுத்து, குறித்த வெளிமாவட்ட மீனவர் உப்புமாவெளி பகுதி மீனவர் களுக்கெதிராக காவற்றுறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இரு மீனவர்கள் காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்