வவுனியா வடக்கில் பாடாசலை மூடுவதற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

breaking
வவுனியா வடக்கு பிரதேசத்தில் பட்டடைபிரிந்தகுளம் அ.த.க.பாடசாலையை மூடுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களினால் இன்று 15.07.19 காலை ஆர்ப்பாட்டம் ஒன்று பாடசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. மீள்குடியமர்வின் பின்னர் பாடசாலையின் மாணவர் வரவு குறைந்துள்ளதால் கற்குளம் தமிழ் கலவன் பாடசாலையுடன் இணைப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாகாண கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க நெடுங்கேணி கோட்டக்கல்வி அதிகாரி இன்று பாடசாலைக்கு வருகை தந்தார். இதனையறிந்த மக்கள் அவரை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாடசாலையின் உபகரணங்கள் ஏற்றும் நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.