கூட்டமைப்பின் உறுப்பினர்ஒவ்வொருவருக்கும் 500 மில்லியன் பணம்-விமல்வீரவன்ச!

breaking
கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் 500 மில்லியன் ரூபா பணம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். இது கப்பமாக வழங்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு பந்தம் பிடிக்கின்றார்கள் கூட்டமைப்பின் செய்பாடுகள் முற்று முழுதாக அரசாங்கத்தினை தக்கவைத்துக்கொள்வதும் அவர்களிடம் இருந்து எவ்வளவு பணம் பெறமுடியுமோ அவ்வளவு பணத்தினை பெறுவதும் தான். என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச முல்லைத்தீவு வெலிஓயா பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் உதவியுடன் ரணில் தனது பெரும்பான்மையினை நிரூபிக்க முயற்சித்து வருகின்றமை அம்பலமாகின்றது இதன் ஊடாக அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் ஆகலாம் என நினைக்கின்றார்கள். இதற்கு கூட்டமைப்பு முழுமையான ஆதரவினை ரணிலுக்கு தெரிவித்து வருகின்றார்கள். என்றும் விமல் வீரவன்ச முல்லைத்தீவில் நடைபெற்ற மக்கள் நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.