மக்கள் போராட்டத்திற்கு பெரும் குடைச்சல் கொடுக்கும் ஶ்ரீலங்காப் படைகள்

breaking
  தென்தமிழீழம்: திருகோணமலை- கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையாா் ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்டப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்துவதற்காக வடக்கிலிருந்து சென்ற இளைஞா்களை தடுத்துவைத்து பொலிஸாரும், இராணுவத்தினரும் அட்டகாசம் புாிந்ததாக இளைஞா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். இன்றைய தினம் காலை பௌத்த விகாரை கட்டப்படும் இடத்தில் போராட்டம் நடைபெறவிருந்த நிலையில் வடகிழக்கிலிருந்து பெருமளவு மக்கள் குறிப்பாக இளைஞா்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் போராட்டத்திற்கு சென்ற இளைஞா்களை பொலிஸாரும், இராணுவத்தினா் அச்சுறுத்தி தடுத்துவைத்துள்ளனா். இது குறித்து இளைஞா்கள் கேள்வி எழுப்பியபோதும் பொலிஸாரும், இராணுவத்தினரும் பதிலளிக்காத நிலையில் நீண்ட நேரத்தின் பின்னரே அவா்களை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.