வெலிக்கடைச் சிறையில் தமிழ் கைதிகள் மீது புதுவகை ஒடுக்குமுறை!

breaking
வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதிகள் வணங்குவதற்காக வணக்கஸ்த்தலங்கள் உள்ளன். தமிழ் சிங்கள முஸ்லீம் கைதிகளுக்கென தனித்தனியாக சைவக்கோவில், கிறிஸ்த்தவ கோவில், பள்ளிவாசல்இ பௌத்த விகாரை என்பன உள்ளன. ஆனாலும் பள்ளிவாசல்களிலும்இ விகாரைகளிலும் புனிதம் பேணப்படுகின்றபோதும் சைவக் கோவில் உள்ள பகுதியில் மிகக் கேவலமான செயற்பாடுகள் சிங்கள முஸ்லீம் கைதிகளால் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் கைதிகள் தம்மைப் பார்க்கச் செல்லும் உறவினர்களிடம் கூறி கவலையடைந்துள்ளனர். பௌத்த விகாரை அமைந்துள்ள சிறைக்க கட்டடத்தொகுதில் தனியே பௌத்த சமயத்தை சார்ந்த கைதிகளும்இ பள்ளிவாசல் அமைந்துள்ள சிறைக் கட்டடத்தொகுதில் தனியே இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தவர்களும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சைவக் கோவில் அமைந்துள்ள சிறையின் கட்டடத் தொகுதியில் தமிழ் கைதிகள் வெறும் 14பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன்இ நூற்றுக் கணக்கான இஸ்லாமியர்களும் பௌத்தர்களும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பண்டிகைக் காலங்களில் பள்ளிவாசலிலும்இ விகாரையிலும் அந்தந்த மதத்திற்குரிய வழிபாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ஆனாலும் சைவக்கோவில் கட்டடத்திற்குள் முஸ்லீம் கைதிகள் தொழுகையில் ஈடுபடுவதும்இ பௌத்த கைதிகள் வெசாக்கூடுகளை கட்டுவதும் அதனால் இந்துகளாக உள்ள கைதிகள் மிகமோசமாக உளச்சித்திரவதைகளுக்க உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகின்றது. இவற்றை விடவும் மோசமாக முஸ்லீம் கைதிகள் சைவவழிபாட்டிடத்தில் இறைச்சிகளை வைத்து உண்ணுதல்இ கழிவுகளை அங்கேயே கொட்டுதல் போன்ற செயற்பாடுகளில் இஸ்லாமிய கைதிகள் ஈடுபட்டுவருகின்றனர் எனவும் கூறி கவலை வெளியிட்டுள்ளனர். மேலும் சைவ சமய வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள பகுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் உதவியுடன் ஆபாசப் படங்களை பெற்று அங்குள்ள தொலைக்காட்சியில் பகிரங்கமாகவே பார்ப்பதாபகவும் தமிழ் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனைப் பற்றி முறையிட்டால் தமிழ் கைதிகளை தனிமைப்படுத்தி அச்சுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். இக்கொடுமைகளை சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கைதிகள் கோரியுள்ளனர்.