இந்து ஆலயத்திற்குள் நுழைந்த முஸ்லிம் இளைஞர்களால் பதற்றம்.!

breaking
தென்  தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள் நுளைய முற்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டமாவடியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள் இலங்கையின் திருப்பதி என்று அழைக்கப்படுகின்ற வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள் நுளைய முற்பட்ட வேளை, அவா்களது நடவடிக்கையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக பொது மக்களால் மடக்கி பிடிக்கப்படடு ஆலய நிருவாகத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஆலயத்திற்கு வந்த காரணம் பற்றி விசாரித்த போது, சரியான காரணத்தைக் கூறாமல் அவர்கள் தடுமாறியுள்ளார்கள். இந்த விடயம் பற்றி காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த மூன்று இளைஞர்களையும், அவர்களுடன் கூட வந்த தமிழ் இளைஞர் ஒருவரையும் கைதுசெய்து அழைத்துச் சென்றனர் சந்தேக நபர்கள் நால்வரும் மேலதிக விசாரனைகளுக்காக எதிர்வருகின்ற 24-7-2019 வரை தடுத்து வைக்கப்படுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.