வாகன விபத்து : இரண்டு சிறுவர்கள் உட்பட 17 காயம்

breaking
  ஶ்ரீலங்கா: அநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்துள்ளனர். வான் ஒன்று லொறியுடன் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(செவ்வாய்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வானில் பயணித்த 13 பெண்கள், சிறுவர்கள் இருவர் மற்றும் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த பெண்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கம்பஹா – கிரிந்திவல பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.