தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை

breaking
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெலேத ரஜமகா விகாரையில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், “21/4 குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தெளிவான சாட்சியங்கள் இருப்பதால், அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.