பௌத்தத்திற்கு முன்னுரிமையினை ஆதரித்த கூட்டமைப்பினர்!

breaking
ஸ்ரீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலில் பௌத்தத்திற்கு முன்னுரிமை என்ற கோட்பாட்டிற்கு பாராளுமன்றில் ஆதரவினை தெரிவித்துவிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்மக்களுக்கு தங்கள் இன்னொரு முகத்தினை காட்டிவருகின்றார்கள். யாழ்ப்பாணத்தில் பௌத்த விகாரை அமைப்பதற்கு கூட்டமைப்பின் பிரதேச சபை ஒன்று காணி கொடுத்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் சிங்கள ஆட்சியாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏகோபித்த ஆதரவினை கொடுத்துவிட்டு தங்கள் வாக்கு நிலங்களில் உள்ள தமிழ்மக்களுக்கு இன்னொரு முகத்தினை கூட்டமைப்பினர் காட்டிவருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். பணத்தின் மீது ஆசைகொண்டு ஆசனம் ஏறியவர்கள் இன்று வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள் வடக்கு கிழக்கில் ரணிலின் ஆயிரம் விகாரை அமைப்பிற்கு ஆதரவினை தெரிவித்து வாக்களித்துவிட்டு இன்று வடக்கு கிழக்கில் தமிழர் தாயகத்தில் முற்றுமுழுதாக தமிழ்மக்கள் வாழும் இடங்களில் பௌத்த விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நாடகம் ஆடிவருகின்றார்கள். இவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகள் மக்களின் விருப்புக்களுக்கு அப்பால் சென்று பண ஆசைபிடித்து ரணிலின் கைக்குள் ஆடும் கைப்பொம்மைகள் என்பதை இனிவரும் தேர்தல் காலங்களிலாவது மக்கள் உணர்ந்து வாக்களிக்கவேண்டும்