ரஞ்சன் ராமநாயக்க நடத்துவது அணுகுண்டு தாக்குதல்.!

breaking
சிங்கள  அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அமைச்சு பதவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என, சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். ராஜாங்க அமைச்சர் ரஞசன் ராமநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடுகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து, தேரர்கள் சிலர் காவல் துறை தலையகத்துக்கு நேறறு (17) வருகை தந்திருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளிடுகையில் மாகல்கந்தே சுதந்த தேரர்  இந்த விடயத்தை கூறியுள்ளார். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் நடத்தியது தற்கொலை குண்டு தாக்குதல் என்றும்,  இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடத்துவது அணுகுண்டு தாக்குதல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.