பள்ளிக்குடா கடற்பரப்பில் 10 இலட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் மீட்பு

breaking
  வடதமிழீழம் :பூநகரி பள்ளிக்குடா கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகளை மீட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அவற்றை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலர்கள், பூநகரி பள்ளிக்குடா கடற்கரையோரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சோதனை ரோந்து நடவடிக்கையை முன்னெடுத்தனர். அதன்போது சுமார் 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகள் அவர்களால் மீட்கப்பட்டன. அந்த வலைகள் தொடர்பில் கடற்தொழிலாளர் சங்கங்களுடன் பேசப்பட்டது. எனினும் வலைகளுக்கு உரிமை கோர எவரும் முன் வராமையால், அதிகாரிகள் அவற்றை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.