எடப்பாடிக்கு கடத்தல் மிரட்டல் விடுத்த புரோட்டா மாஸ்டர்.?

breaking
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கடத்தப் போவதாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த நபர் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகலில் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100-ஐ தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடத்தப் போவதாகக் கூறிவிட்டு உடனடியாக இணைப்பைத் துண்டித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த நபர் பேசிய தொலைபேசி எண்ணை ஆய்வு செய்த போது அவர் திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த ரகமதுல்லா( வயது 40)  என தெரியவந்தது.