தேசியக்கட்சிகள் தமிழ் வாக்குகளை சிதறடிக்க முயற்சிக்கின்றன .!

breaking
தேசியக் கட்சிகள் தமிழ் வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி, சிவநாதன் தெரிவித்தார். தென் தமிழீழம் , மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தம் தெரிவித்த அவர், “தேசியக் கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பிரிவினையை ஏற்படுத்தி அதில் குளிர்காயவேண்டும் என்றே எப்போதும் எதிர்பார்க்கின்றனர். எந்த அரசாங்கம் என்றாலும் தமிழர்களை புறந்தள்ளுவதிலும் அவர்களுக்கு வேறு சாயம் பூசுவதிலும் குறியாக இருப்பார்களே ஒழிய தமிழ் மக்கள் மீது அக்கரையோ, நலனோ காட்டுவதில்லை. அவ்வாறு இருந்திருந்தால் 70வருடகாலத்தில் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைத்திருப்பார்கள்” என மேலும் தெரிவித்தார்.