உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பில் இடம்பெறற முஸ்லீம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நீர்கொழும்பில் தங்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான்,பாக்கிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளினை சேர்ந்த அகதிகளில் ஒரு தொகுதியினர் அழைத்துவரப்பட்டு வவுனியா பூந்தோட்டம் பகதியில் உள்ள கூட்டுறவுப்பயிற்சி கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
பிரதேச அரசியல்வாதிகள் பொது அமைப்புக்கள் என பலரின் எதிர்ப்புக்கு மத்தியில் அவர்கள் படையிரின் பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர்கள் மீளவும் நீர்கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.