அவுஸ்ரேலியா சென்ற 20 தமிழ் அகதிகள் கிறிஸ்மஸ் தீவிற்கு மாற்றம்!

breaking
சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக , அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 20 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக் கிழமை இவர்களைக் கைதுசெய்த அதிகாரிகள் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பியுள்ளதாகவும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த மே மாதத்துக்குப் பின்னர், அவுஸ்திரேலியாவுக்கு நுழைந்த இரண்டாவது இலங்கையர் குழு இதுவென்றும் தெரிவிக்கப்படுகின்றது.