சிங்கள ஆட்சியாளர்கள் என்றும் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை பிரயோகிப்பாளர்கள்!

breaking
சிங்கள ஆட்சியாளர்கள் என்றும் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையினை கட்டவிழ்த்து விட்டு வருகின்றார்கள் இவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் அன்று யூலைப்படுகொலை தொடக்கம் இன்று வடக்கு கிழக்கில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு வரை தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கையாள்பவர்களின் கையில்தான் அரசு ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்று தமிழ்தேசிய மக்கள் முன்ணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கருப்பு ஜூலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் நினைவுரையினை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் அவர்கள் நிகழ்தியுள்ளார்.