முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவலாக மழை!

breaking
நீண்டநாட்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவலாக மழைபெய்துள்ளது கடந்த சில காலமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவி வந்த வறட்சியினை தொடர்ந்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் 23.07.19 அன்று மாலை வேளை கடும் மழைபெய்துள்ளன. மக்கள் குடிநீரினை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சி காரணமாக பலகுளங்கள் வற்றியுள்ள நிலையில் சுமார் இரண்டு மணிநேரம் மழைபெய்துள்ளது. முள்ளியவளை,வற்றாப்பளை,தண்ணீரூற்று,முல்லைத்தீவு நகரம்,புதுக்குடியிருப்பு முள்ளிவாய்க்கால்,உடையார்கட்டு சுதந்திரபுரம்,விசுவமடு மற்றும் மன்னாகண்டல் பகுதிகளில் பெய்த கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. பலவீதிகள் அபிவிருத்திப்பணிக்கா கிரவல் போடப்பட்டும் பாலங்கள் கட்டப்பட்டுமான கட்டுமான வேலைகள் காணப்பட்ட போதும் மழைவெள்ளத்தினால் பதிப்பினை எதிர் கொண்டுள்ளார்கள் இதேவேளை பல நீர்வடிகால் சீரான வடிகாலமைப்பு இல்லாத காரணத்தினால் மழைநீர் தேங்கிக்காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது. புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இதுவரை சரியான வடிகாலமைப்பு இல்லாத காரணத்தினால் சில இடங்களில் மழைவெள்ளம் தேங்கிநின்றுள்ளன.