எச்சில் தேனீரை ஊற்றிவிட்டு சமாதானம் கதைக்கும் கயவர்கள்

breaking
  எச்சில் தேனீரை ஊற்றிவிட்டு சமாதானமாக போவோம் என ஊற்றியவரும், சமாதானமாக போங்கள் என பொலிஸாரும் கேட்பதாக தென் கயிலை ஆதீன 2ம் குரு முதல்வா் தம்பிரான் அடிகளாா் கூறியுள்ளாா். சமா­தா­ன­மா­கச் செல்­வ­தையேவிரும்­பு­கி­றேன் என்று எச்­சில் தேநீர் ஊற்­றிய சந்­தே­க­ந­பர்­க­ளும் பொலிஸ் நிலை­யத்­தில் வைத்­துத் தெரி­வித்­த­னர் என்­றும் தம்­பி­ரான் அடி­க­ளார் தெரி­வித்­ தார். இது தொடர்­பில் நேற்று அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: கன்­னியா வெந்­நீர் ஊற்று பிள்­ளை­யார் ஆலய இடித்து அழிப்­பின் பின்­னர் நடத்­தப்­பட்ட மக்­கள் மயப்­ப­டுத்­தப்­பட்ட போராட்­டத்­தின் போது ஆதீன குரு­மு­தல்­வர் மீது சில நபர்­கள் தேநீர் ஊற்றி அவ­ரை­யும் அவர் சார்ந்­த­வர்­க­ளை­யும் அவ­ம­தித்­த­னர். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் வாய்­மொழி மூல­மான முறைப்­பாடு பொலி­ஸா­ருக்கு உடனே வழங்­ கப்­பட்­டது. ஆனால் சம்­பவ இடத்­தில் இவ்­வாறு அசம்­பா­வி­தத்தை மேற்­கொண்­ட­வர்­கள் மீது பொலி­ஸார் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. அதன் பின்­னர் எழுத்து மூல முறைப்­பாடு பொலிஸ் நிலை­யத்­தில் பதிவு செய்­யப்­பட்­டது. நேற்­ றை­ய­தி­னம் (நேற்­று­முன்­தி­னம்) திரு­கோ­ண­மலை உப்­பு­வெளி பொலிஸ் நிலை­யத்­துக்கு நாம் அழைக்­கப்­பட்­டோம். குறித்த அசம்­பா­வி­தத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என சந்­தே­கிக்­கப்­ப­டும் தரப்­பி­ன­ரும் வந்­தி­ருந்­ த­னர். விசா­ர­ணை­யின் பின்­னர் எதிர்த்­த­ரப்­பி­னர் தாம் இவ்­வா­றான அசம்­பா­வி­தத்­தைச் செய்­ய­ வில்லை. இந்­தப் பிரச்­சி­னையை இரண்டு தரப்­பும் சுமு­க­மாக முடித்­துக்­கொள்ள வேண்­டும் என்ற நோக்­கில் பொலி­ஸா­ரின் பேச்­சும், எதிர்த்­த­ரப்­பின் பேச்­சும் அமைந்­தி­ருந்­தது. ஆன்­மிக நெறி­யில் பிற சம­யத்தை மதித்­தல், அன்பு செய்­தல் இதையே நாம் பின்­பற்­று­கின்­றோம். இன­மு­று­கலை தோற்­று­வித்­தல் எமது நோக்­கம் அல்ல. எச்­சில் தேநீர் ஊற்­றப்­பட்­ட­வு­டன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தால் இன்று இது மக்­கள் மயப்­ப­டுத்­தப்­பட்ட பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருக்­காது. ஆகவே மக்­கள் எம்­மோ­ டும் நிற்­கும்­போது உட­ன­டி­யாக சமா­தா­னத்­துக்கு வரு­வ­தற்கு முடி­வு­களை நாங்­கள் எடுக்க முடி­யாது. மக்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டியே எமது முடிவை அறி­விப்­போம் – என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.