தரவை பிள்ளையார் ஆலய வீதியின் பெயர் கடற்கரை பள்ளிவாசல் வீதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டதோடு காவல்துறையில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
கல்முனை உப பிரதேச செயலகத்தின் எல்லையில் அமைந்துள்ள தரவை பிள்ளையார் ஆலய வீதியே இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வீதியை காபட் வீதியாக புனரமைப்பதற்குநெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிமின் ரண் மாவத்திட்டத்தின் கீழ் இவ்வீதிக்கு ஒரு கோடி 80 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
நேற்றுப் புதன்கிழமை வீதியைப் புனரமைக்கும் ஆரம்ப வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.