சைவ மக்களிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய செயல்: ஆறுமுகநாவலர் சபை கண்டனம்

breaking
  தென்தமிழீழம்: திரு­கோ­ண­மலை கன்­னியா வெந்­நீ­ரூற்­றுப் பகு­தி­யில் சைவ அடை­யா­ளங்­க­ளைத் திட்­ட­மிட்டு மறைக்க முனை­யும் தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தின் நட­வ­டிக்­கை­க­ளும், அதனை எதிர்த்து தமி­ழர் கூடி­ய­போது, தவத்­திரு தென்­க­யிலை ஆதீன குரு­மு­தல்­வர் மேல் விச­மி­கள் சுடு­தே­நீர் ஊற்­றி­ய­மை­யும் சைவ­மக்­க­ளி­டம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்வாறு தெரிவித்துள்ள கொழும்பிலுள்ள சிறி­ல­சிறி ஆறு­மு­க­நா­வ­லர் சபை, கடும் கண்­ட­ன­மும் தெரி­வித்­துள்­ளது. இது பற்றி சபை அனுப்­பிய செய்­திக் குறிப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­ வது: நாட்­டில் நில­வி­வ­ரும் பல்­வே­று­பட்ட அசா­தா­ரண சூழ்­நி­லை­க­ளின் மத்­தி­யில் தமிழ் மக்­கள் வேதனை கொள்­ளு­ம­ள­வுக்கு முல்­லைத்­தீ­வில் நீரா­வி­யடி, செம்­ம­லைப் பிள்­ளை­யார் கோவி­லில் சைவ மக்­க­ளின் வழி­பா­டு­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள இடைஞ்­சல்­கள், நத்­திக்­கொ­டியை கழற்றி வீசி பௌத்த துற­வி­யர் மேற்­கொண்ட அநா­க­ரி­க­மான நட­வ­டிக்­கை­க­ளும் இந்து மக்­க­ளி­டம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. பௌத்­த – -­சைவ உறவை வலுப்­ப­டுத்த அர­சி­யற் தலை­வர்­க­ளும் சம­யத் தலை­வர்­க­ளும் முன்­வ­ர­வேண்­டும். சைவ மக்­க­ளி­னு­டைய எதிர்­பார்ப்­புக்­களை நன்­கு­ணர்ந்து கட­மை­யாற்­றும் இலங்கை இந்து மத கலா­சார அலு­வல்­கள் அமைச்­சர் மனோ கணே­ச­னின் செயற் ­பா­டு­களை வர­வேற்­கின்­றோம். காலத்­துக்கு ஏற்­றாற்­போல் தக்க நட­வ­டிக்­கை­களை உரி­ய­நே­ரங்­க­ளில் எடுத்து இந்­தப் பணி­யில் முன்­னின்று இந்­து­மத கலா­சார அலு­வல்­கள் அமைச்­ச­ரெ­னும் வகை­யில் சைவ­ச­மய அடை­யா­ளங்­களை அவர் காத்­தி­ட­வேண்­டும் – – என்­றுள்­ளது.