யாழ் ஊரெழுவில் குழவி கொட்டிற்கு இலக்காகி முதியவர் பலி!

breaking
யாழ்ப்பாணம் ஊரெழு அம்மன் ஆலயத்தின் மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆலயத்திலிருந்த மக்கள் குழப்பமடைந்தனர். மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்ததால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் நாலா திசையும் ஓடினர். மூவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர். அவர்களில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.