எங்களை ஆயுதம் தூக்க வைத்து விடாதீர்கள் வடிவேல் சுரேஸ் .!

breaking
அவசரகால சட்டத்தை பயன்படுத்தி பொலிஸார் பெருந்தோட்ட தமிழ் இளைஞர்களுடன் முரண்படுவதாகவும் எனவே, பெருந்தோட்ட இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப்போராட வேண்டுமென விரும்புகின்றீர்களா? என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், “பெருந்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலர் இனவாத ரீதியில் செயற்படுகின்றனர். தோட்ட நிறுவன முதலாளிகளுடன் சேர்ந்து விருந்துகளில் பங்கேற்கும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளே இவ்வாறான இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கிப் போராடினார்கள். முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் தூக்கி விட்டார்கள். பெருந்தோட்ட இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டுமென விரும்புகின்றீர்களா?” என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.